புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்

எல்லாம் வல்ல இறைவன் முஸ்லிம் சமுதாயத்திற்கு கடமையாக்கி வைத்திருக்கின்ற எல்லா வணக்க வழிபாடுகளும் ஒரு புனிதமான நோக்கத்தைக் கொண்டிருப்பவையாக இருக்கிறது. இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றும் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பொன்னான வாய்ப்பைப் பெற்ற பெருமக்கள், அல்லாஹ்வின் விருந்தாளிகளாக இருக்கிறார்கள். பொதுவாக விருந்தாளியாகச் செல்லும் ஒருவர் கையாள வேண்டிய ஒழுக்கங்களை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். எனவே அல்லாஹ்வின் விருந்தாளிகளாகச் செல்கின்றவர்கள் வீண் பேச்சுக்கள், விதண்டாவாதங்கள், சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து அடக்கமாகவும் அமைதியாகவும் அதிகமாக இறை [...]