மனித பேச்சாற்றல் ஓர் அமானிதம்

எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா இவ்வையகத்தில் படைக்கப்பட்டுள்ள அனைத்து உயிரினங்களும் அவ் உயிரினங்களைச் சார்ந்த அல்லது சாராத உயிரினங்களுடன் தமது உணர்வுகளை அல்லாஹுத்தஆலா அவைகளுக்கு கற்றுக் கொடுத்த பிரகாரம், அவைகளின் சக்திக்கு ஏற்றவாறு பரிமாறிக் கொள்வதை நாம் காண்கின்றோம். இவ் அடிப்படையில் மனிதனும் தன் சிந்தனையில் பரிமாறிக் கொள்ள அல்லாஹுத்தஆலா மனிதர்களுக்கு பேச்சாற்றலை வழங்கி உள்ளான். இன்நிஃமத் அல்லாஹுத்தஆலாவால் எமக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் உயரிய நிஃமத் என்ற வகையில் அல்லாஹுத்தஆலாவும் எம் உயிரலும் மேலான ரசூல் (ஸல்) அவர்களும் இன் நிஃமத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று எமக்கு போதித்தார்களோ அவர்கள் போதித்த பிரகாரமே இன் நிஃமத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.

ரஸ¤ல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் எனக்கு மிகவும் விருப்பத்திற்குரியவர் மறுமை நாளில் எனக்கு மிக அருகாமையில் இருப்பவரும் மிகச் சிறந்த பண்பாடுகளைக் கொண்டவருமே. உங்களில் எனக்கு மிகவும் வெறுப்புக்குரியவர். மறுமை நாளில் எனக்கு மிகத் தூரத்தில் இருப்பவரும் உங்களில் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பவரும் அடுத்தவர்களை சாரூபவரும் பெருமை அடிப்பவருமே!

அல்லாஹுத்தஆலாவால் எமக்கு அளிக்கப்பட்ட இன் நிஃமத்தின் ஊடாக எமக்கு பிரயோசனம் அளிக்கக்கூடிய மறுமை வாழ்க்கைக்கு தேவையான நல்ல அமல்கள் மாத்திரமே புரிய வேண்டும். மாறாக எம்மால் பேச முடியும் என்பதற்காக எம்முடைய வாய்க்கு வந்ததை எல்லாம் எம்மால் பேச முடியாது நாம் ஒரு விடயத்தை இன்னும் ஒரு மனிதனுக்கு கூறுவது என்றால் அவ்விடயத்தைப் பற்றிய போதிய அறிவு எம்மிடம் இருக்க வேண்டும். நாம் கூறும் விடயம் நம்பகத்தன்மை உள்ளதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு இல்லையாயின் நாம் மெளனமாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிக்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது வாய் மூடி மெளனமாக இருக்கட்டும் (புஹாரி, முஸ்லிம்)

அல்லாஹ்வின் தூதர் ரஸ¤ல் (ஸல்) அவர்களின் பேரரான ஹஸன் (ரழி) அவர்கள் குறிப்பிடுகையில் ‘ஒரு மனிதனின் பேச்சு அதிகரித்தால் அவன் சொல்லும் பொய்களும் அதிகரிக்கும். ஒரு மனிதனின் செல்வம் வளர்ந்தால் அவன் செய்யும் குற்றங்களும் வளரும்.

இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் மெளனம் என்பது அறிவு நிறைந்த ஒரு செயல். ஆனால் அதன் வழியில் செல்பவர்கள் மிகக் குறைவு எம் தாய் நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் இச் சூழ் நிலையில் மிகவும் பொறுமையாகவும், நிதானத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை ஆகும். எமக்கு கிடைக்கின்ற செய்திகள் தகவல்களின் உண்மை தன்மையை அறியாது அச் செய்திகளை அல்லது தகவல்களை பிறர் மத்தியில் குறிப்பிடக்கூடாது. அல்லாஹுத்தஆலா திருமறையில் குறிப்பிடும்போது.

முஃமின்களே! பாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்திகளை கொண்டு வந்தால். அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவைபற்றி நீங்களே கைசேதப்படுவீர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (சூரதுல் ஹுஜுராத் : 6)

அறியாமையின் அல்லது போதிய தெளிவின்மையின் காரணமாக நாம் வெளியிடும் வார்த்தைகளினால் சில சமயம் பெரும் ஆபத்துக்கு அது எம்மை கொண்டு போய் சேர்த்துவிடும்.

ஒரு முஸ்லிமின் வாயிலிருந்து வெளிவரக்கூடிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மையை உரைக்கக் கூடிய வார்த்தைகளாகவே வெளிவர வேண்டும். ‘ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்.

(ஸ¤ரதுல் தவ்பா : 119)

அப்துல்லாஹ் இப்னு பஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ‘நிச்சயமாக உண்மை நன்மையின் பக்கம் வழிகாட்டும். நன்மை சுவர்க்கத்தின் பக்கம் வழிகாட்டும். ஒருவர் உண்மை பேசுவதை கடைப்பிடிக்கிறார் என்றால் அவர் அல்லாஹுத்தஆலாவிடம் உண்மையாளர் என எழுதப்படுகின்றார். நிச்சயமாக பொய் பாவத்தின் பக்கம் வழிகாட்டும் பாவம் நரகத்தின் பக்கம் வழிகாட்டும் ஒருவர் அதிகம் பொய் உரைப்பவராக இருந்தால் அவர் அல்லாஹுத்தஆலாவிடம் பொய்யர் என எழுதப்படுவார்’ என ரஸ¤ல் (ஸல்) அவர்கள் பீறினார்கள். (நூற்கள் : புஹாரி முஸ்லிம்)

இவ்வைபயகத்தில் வாழும் காலத்தில் எமக்கு எதிராக யார் சூழ்ச்சி செய்தாலும் எம்முடைய உடமைகளுக்கும் உயிருக்கும் பங்கம் விளைக்க முயற்சி செய்தாலும் அல்லாஹுத்தஆலாவின் அனுமதி இல்லாமல் அத்தகையவர்களால் ஒன்றும் புரிய முடியாது என்பது உண்மை. இத்தகையவர்களுக்கு அந்த ரஹ்மானே! போதுமானவன் இத்தகைய சந்தர்ப்பத்தில் நாம் எம்மால் முடிவுமான வரை அவர்களுக்கு நன்மையையே புரிய வேண்டும். இதனைப் பற்றி அல்லாஹுத்தஆலா திருமறையில் குறிப்பிடும் போது :

நன்மையும் தீமையும் சமனாகி விடாது (ஆதலால் நபியே தீமையை) நீங்கள் நன்மையைக் கொண்டே தடுத்துக்கொள்ளுங்கள் அவ்வாறாயின் உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையான மிக்க நெருங்கிய நண்பனைப்போல் காண்பீர்கள். பொறுமையுடையவர்களைத் தவிர மற்றொருவர் இதனை அடைய மாட்டார்கள் அன்றி பெறும் பாக்கியம் உடையவர்களைத் தவிர மற்றொருவரும் இதனை அடைய மாட்டார்கள்.

(ஸ¤ரா ஹாமீம் அஸ்ஸஜ்தா 34 : 35)

Scridb filter

முஸ்லிம்கள் செல்லப் பிராணியாக ஏன் நாய் வளர்ப்பதில்லை !

dogs முஸ்லிம்கள் செல்லப் பிராணியாக ஏன் நாய் வளர்ப்பதில்லை !
நாய் ஊணுண்னும் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இதற்கு 220 நுகர்ச்சிக் கண்ணறைகள் இருக்கின்றது. நாயானது மிகக்குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளையும் (16 -20 Hz) மிக அதிக அதிர்வெண் ஒலிகளையும் (70 KHz – 100 KHz) கேட்டுக்கும் தன்மை வாய்ந்தது.

இதனுடைய ஆயுள் காலம் ஏழு ஆண்டுகளில் இருந்து இருபது ஆண்டுகள் வரையாகும். இதன் கர்ப்ப காலம் 62 நாட்கள் ஆகும். நாய்யுடைய உடம்பில் தனாசு என்னும் ஒரு சிறிய பூச்சிகள் உள்ளன இவை நாயின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் தன்மையை கொண்டது. தமிழில் ஆண் நாய்களை கடுவன் என்றும் பெண் நாய்களை பெட்டை எனவும் அழைக்கப்படுகிறது. நாயினை வளர்க்க இஸ்லாம் தடைசெய்திருக்கின்றது .

உலகின் முதன் முதலாக வீட்டு விலாங்காக கருதப்பட்ட நாயானது தூங்கும் போது காற்று வீசும் திசையை நோக்கி தனது தலையை வைத்து தூங்கும். வன விலங்குகளில் அதிக 42 பற்களையுடைய நாய்க்கு நாக்கில் மட்டும் தான் வியர்க்கும். முன் கால்களில் ஐந்து விரல்களும் பின்கால்களில் நான்கு விரல்களையும் உடைய நாய் ஒரே நேரத்தில் இருகண்களாளும் இரு பொருட்களை பார்க்கும் திறன்படைத்தது. மேலும் மோப்ப சக்தி வாய்ந்ததும் ஆகும். நாய்க்கு இதயத்துடிப்பு ஒரே சீராக இருப்பதில்லை . மாலை தீவீல் நாய்கள் இல்லை . வியட்நாம் நாட்டில் நாய் இறைச்சியை பெரிதும் விரும்பி உண்பார்கள் . ஐரோப்பவில் நாய்க்கு ரத்தவங்கிகள் இருக்கின்றது .

நாய்களை வளர்ப்பதற்கு இஸ்லாம் ஏன் தடை செய்கிறது ஏன்றால் நாயானது மிகவும் ஆபத்தானதும் நோய்க் கிருமிகள் வாய்ந்தவையகவும் காணப்படுகிறது. நாய்களின் இனப் பெருக்கம் மிகவும் அதிகமாகும் இதனால் நாய்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு விசர் நாய்காளகவும் மாறுவது உண்டு. இவ்வாறு விசர் பிடித்த நாய் கடித்தால் ரேபிஸ் அல்லது ஹைட்ரேபோலியா என்று சொல்லப்படும் நீர்வெறுப்பு நோய் ஏற்படும் இவ் நோய்யினை மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது இதற்கு மரணம் மட்டுமே மருந்தாகும்.

ஜிப்ரீல் , நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களின் வீட்டிற்கு தாம் வருகை தருவதாக ) வாக்களித்திருந்தார், (ஆனால் வரவில்லை , நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அது பற்றி பின்னர் கேட்டபோது ‘ உருவப் படமுள்ள வீட்டிலும் நாய் உள்ள வீட்டிலும் ( வானவர்களாகிய) நாங்கள் நுழைவதில்லை’ என்றார் . அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி ) நூல் புகாரி 3227 )

கால் நடைகளைக் காவல் காக்கும் நாயையும், வேட்டைக்கான பயற்சி அளிக்கப்பட்ட நாயையும் தவிர,( வேறு காரணங்களுக்காக ) நாய் வளர்ப்பவருடைய நற்செயல்களின் நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்துகள் அளவுக்கு குறைந்துவிடும் ‘புகாரி 5480.5482 .முஸ்லிம் 3202 )

Scridb filter

உங்களை விட தாழ்ந்த தரத்திலுள்ளவர்களை உற்று நோக்குங்கள்

பொதுவாக எல்லா மனிதர்களிடத்திலும் சிறப்பாக முஸ்லிம்களிடத்திலும் அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருளை இனங்கண்டு சிந்தித்து சீர்த்தூக்கிப் பார்த்து நன்றி செலுத்துகின்ற மனப்பான்மை குறைந்து காணப்படுகின்றது. மாறாக தங்களைவிட மேலானவர்களைப் போல ஆகிவிட வேண்டுமென்று சிந்திக்கின்ற நிலைமையே காணப்படுகின்றது. அதற்காக பொறாமையுடனும் பேராசையுடனும் செயல்படுகின்றோம். இத்தகைய சிந்தனைப் போக்கு பிழையானதாகும். இதனை அல்குர்ஆன் கண்டிருக்கிறது.

நபி மூஸா (அலை) அவர்களது காலத்தில் பெரும் சீமானாக வாழ்ந்து அல்லாஹ்வின் தண்டனைக்குள்ளான காரூனைப் போல நாங்களும் உலகத்தில் வாழ வேண்டும் என்று கருதிய மனிதர்கள் குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

“அவன் (ஒருநாள் மிக்க ஆடம்பரமான) தன் அலங்காரத்துடன் தன் ஜனங்கள் முன் சென்றான். அதனைக் (கண்ணுற்றவர்களில்) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையே (பெரிதென) விரும்புகின்றவர்களாக இருந்தார்களோ அவர்கள் காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் (கொடுக்கப்பட) வேண்டாமா? ஏனென்றால் நிச்சயமாக அவன் பெரும் பாக்கியவான் என்று கூறினார்கள்” (அல்குர்ஆன்: சூரா அல்கஸஸ்: 7)

இத்தகைய சடவாதப் பார்வை பொறாமையைத் தோற்றுவிப்பதோடு மட்டுமல்லாது தன்னைப் பற்றி அல்லாஹ் எழுதி வைத்தது பொருத்தமற்றது என்ற பிழையான மனப்பதிவையும் உருவாக்கிவிடுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “உங்களைவிட தாழ்ந்த தரத்திலுள்ளவர்களை உற்று நோக்குங்கள். உங்களைவிட மேலானவர்களை உற்று நோக்காதீர்கள். ஏனென்றால் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருளை நீங்கள் இழிவாகக் கருதாமல் இருப்பதற்கு அதுவே மிகப் பொருத்தமான வழிமுறையாகும்” அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரழி) ஆதாரம்: முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “எவரிடம் இரண்டு பண்புகள் காணப்பட்டனவோ அவரை அல்லாஹ் நன்றியுள்ளவர், பொறுமையாளர் என எழுதிக் கொள்கிறான்; (ஒருவர்) உலகியல் விவகாரங்களில் தன்னைவிடத் தாழ்ந்தவரைப் பார்த்துவிட்டு, அவரைவிட தன்னை மேன்மைப்படுத்தியதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்தவர். (அடுத்தவர்) மார்க்க விவகாரங்களில் தன்னைவிடத் தரத்தில் உயர்தவரைப் பார்த்துவிட்டு அவரைப் பின்பற்றி நடந்தவர்” ஆகவேதான், அலி (ரழி) அவர்கள் இப்படிச் சொன்னார்கள்.

“எனக்குப் பாதணி இல்லையே எனக் கவலைப்பட்டேன்; காலிலில்லாதவரைக் காணும்வரை”

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “சொத்து செல்வத்திலும் உடலமைப்பிலும் தன்னை விட மேலானவர்களை உங்களில் ஒருவர் காண நேர்ந்தால் அவர் அவர்களைப் பார்க்காது தன்னைவிட தரத்தில் தாழ்ந்தவர்களை உற்று நோக்கட்டும்”

எல்லாம் வல்ல அல்லாஹ் எமக்கு அபரிமிதமான அருட்கொடைகளை வழங்கியுள்ளான். அதற்கு பின்வரும் குர்ஆன் வசனம் சாட்சியாகும். “மனிதர்களே! வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகளை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான் என்பதையும், அவன் தன் அருட்கொடைகளை மறைவாகவும் வெளிப்படையாகவும் உங்கள் மீது சொரிந்திருக்கிறான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?” (அல்குர்ஆன்: ஸ¥ரதுல் லுக்மான்)

புனித அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது: “உங்களில் சிலரை விட சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி (அருள் புரிந்து) இருப்பதைப்பற்றி நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள்” (அல்குர்ஆன்: ஸ¤ரா அந்நிஸா: 32)

Scridb filter